Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Menaka Mookandi / 2011 ஜூலை 07 , பி.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
கோப்பாய் பகுதியில் கணவர்களை இழந்த பெண்களால் நடத்தப்படும் குடும்பங்களின் ஜீவனோபாயத்துக்காக பசுக்களும் ஆடுகளும் இராணுவத்தின் ஜீவனோபாயத் திட்டத்தீன் கீழ் வழங்கப்பட்டுள்ளன.
கோப்பாய் பிரதேச செயலகத்தினால் கிடைத்த தகவலையடுத்து 511ஆவது படையணியின் சிவில் விவகார அலுவலகம் மேற்கொண்ட ஆய்வின்போது அப்பகுதியில் கணவர்கள் இறந்த அல்லது கணவர்கள் முழுமையாக அங்கவீனமான நிலையில் பெண்களால் நடத்தப்படும் 74 குடும்பங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
அவற்றில் முதல் கட்டமாக 12 பெண்களுக்கு அவர்களின் கோரிக்கையின்படி 12 பசுக்கள் வழங்கப்பட்டதாக பாதுகாப்புப் படைகளின் யாழ் கட்டளைத் தலைமையகம் அறிவித்துள்ளது. இப்பசுக்களின் பெறுமதி சுமார் 43,000 ரூபாவாகும். இப்பசுக்களை வழங்குவதற்கான மொத்தச் செலவு 516,000 ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை மேலும் 23 பெண்கள் ஆடுகளை வளர்க்க விரும்பியதால் ஆட்டுக் கொட்டகைகளை அமைப்பதற்கான தகடுகள், சீமெந்து மற்றும் பொருட்கள் வழங்கப்பட்டன. ஒவ்வொருவருக்கும் 15,000 பெறுமதியான பொருட்கள் வழங்கப்பட்டன. இவற்றின் மொத்தப் பெறுதி 345,000 ஆகும்.
லீட்ஸ் அனுசரணையுடன் இவை வழங்கப்பட்டன. 511ஆவது படையணியின் தளபதி பிரிகேடியர் கீர்த்தி கொஸ்டா அண்மையில் இப்பொருட்களை கையளித்தார். லீட்ஸ் யாழ் இணைப்பு உத்தியோகஸ்தர் கே.ஜனேந்திரன் இத்திட்டத்தின் யாழ் லீட்ஸ் யாழ் திட்ட அலுவலர் ரஞ்சித்குமார் ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
24 minute ago
28 minute ago
1 hours ago