2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

யாழ். கடலில் சங்கு பிடிப்பதற்கான தடை நீக்கம்

Super User   / 2011 ஜூலை 08 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். குடா நாட்டு கடற்பரப்பில் சங்கு பிடிப்பதற்கு கடற்தொழில் நீரியல் அமைச்சினால் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட கடற்தொழில் நீரியல் வள திணைக்கள உதவி பணிப்பாளர் இ.ரவீந்திரன் இன்று தெரிவிததுள்ளார்.

கடற்தொழில் நீரியல்வள அமைச்சினால் சங்கு பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தமையினால் இந்தத் தொழிலையே நம்பியிருந்த மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சங்கு பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டுவந்த மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கருத்திற்கொண்டே இந்த தடை நீக்கப்பட்டுள்ளதாகவும் இந்த தொழில் நடவடிக்கைகளுக்காக அனுமதி கோரியிருந்த 1,429 மீனவர்கள் சங்கு பிடிக்கும் தொழில் நடவடிக்கையை முன்னெடுக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X