2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

வடக்கில் எதிர்க்கட்சிகளை அச்சமூட்டுவதற்கு படையினர் பயன்படுத்தப்படுகின்றனர் : ஜே.வி.பி.

Super User   / 2011 ஜூலை 10 , பி.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(யொஹான் பெரேரா)

வடக்கில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சி வேட்பாளர்களை அச்சமூட்டுவதற்கு சக்திவாய்ந்த சில அரசியல்கட்சிகள் பாதுகாப்புப் படையினரைப் பயன்படுத்துவதாக ஜே.வி.பி. குற்றம் சுமத்தியுள்ளது.

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் தமது ஆதரவாளர்கள் பிரச்சாரம் செய்வதை இக்கட்சிகள் பாதுகாப்புப் படையினரை பயன்படுத்தி தடுத்ததாக ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் ஒருவரின் நாயொன்று கொல்லப்பட்டு, அதன் தலை குறித்த வேட்பாளரின் வீட்டு கேற்றில் தொங்கவிடப்பட்டிருந்தது எனவும் விஜித ஹேரத் கூறினார்.

வடக்கைச் சேர்ந்த பெண்களிடம் அரச சார்ப்பு கருத்துக்களை வெளியிடச் செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியொன்று தோல்வியில் முடிவடைந்தது எனவும் அவர் தெரிவித்தார். அரச தொலைக்காட்சியொன்றில் அப்பெண்கள் செவ்வி காணப்பட்டபோது, தாம் எதிர்கொள்ளும் சமூக பொருளாதார பிரச்சினைகளையே அவர்கள் வெளிப்படுத்தியதாக அவர்கூறினார்.

சக்திவாய்ந்த கட்சிகள், இத்தகைய ஜனநாயகமற்ற முறையில் பிரச்சாரங்களை மேற்கொள்கின்றன என அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X