2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

யாழில் ஐ.ம.சு.மு. வேட்பாளர்களை ஆதரித்து தென்னிலங்கை அரசியல்வாதிகள் தேர்தல் பிரசாரம்

Suganthini Ratnam   / 2011 ஜூலை 11 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடவுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யும் நடவடிக்கைகளில் தென்னிலங்கை அரசியல்வாதிகளும் அமைச்சர்களும் கடுமையாக ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில், வலிதெற்குப் பிரதேச செயலாளர் பிரிவில் சிறுவர் விவகார பெண்கள் அபிவிருத்தி அமைச்சர் திஸ்ஸ ஹரலியத்த தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இவர் வீடு வீடாகச் சென்று தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார். அத்துடன்,  சிறிய சிறிய பொதுக்கூட்டங்களையும் யாழ்ப்பாணத்திலுள்ள சனசமூக நிலையங்கள் மற்றும் பொதுவிடங்களிலும் நடத்தி வருகின்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X