2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

மீள்குடியேறிய கட்டுவன் பகுதி மக்கள் நீரை பெறுவதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக விசனம்

Kogilavani   / 2011 ஜூலை 12 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)
கட்டுவன் பகுதிக்கான குடிநீர் விநியோகத்தை வலி வடக்குப் பிரதேச சபை நிறுத்தியமையால் அப் பகுதியில் மீளக்குடியேறிய நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடி நீர் பெறுவதில் பலத்த சிரங்களை எதிர்நோக்கியுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் வலி வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கட்டுவன் கிராம அலுவலர் பிரிவில் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டார்கள்.

இப்பிரதேசத்தில் கடந்த கால யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மீள்குடியேறிய மக்களுக்கு கிணற்று நீரை பெற்றுக்கொள்ளமுடியாத நிலை காணப்பட்டதனை தொடர்ந்து வலி வடக்குப் பிரதேச சபையினால் குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் மக்கள் குடியேறிய ஒரு சில வாரங்களிலேயே வலி வடக்குப் பிதேச சபை குடிநீர் வழங்குவதை நிறுத்தியுள்ளமையால் அப் பகுதயில் மீளக்குடியேறிய மக்கள் குடிநீர் பெறுவதில் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கின்றார்கள்.

இப்பகுதியில் உள்ள  கிணறுகளும் மிகவும் ஆழமானவையாகக் காணப்படுவதினால் கிணற்றை சுத்தம் செய்வதிலும் கூட பெரும் சிரமங்கள் எதிர்கொள்வதாக  அவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இதனால், அயல் கிராமங்களுக்குச் சென்று நீரைபெற்றுக் கொள்வதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே இவ்விடயம் தொடர்பில் கூடிய கவனம் செலுத்தவேண்டுமென்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X