2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

சாவகச்சேரியில் அமைச்சர் டக்ளஸ் துவிச்சக்கர வண்டியில் தேர்தல் பிரசாரம்

Menaka Mookandi   / 2011 ஜூலை 12 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சாவகச்சேரி பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்காக துவிச்சக்கர வண்டியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். இதன்போது மக்களது தேவைகள், கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர் கேட்டறிந்து கொண்டார்.

முக்கியமாக அப்பகுதியில் மக்களுக்கு பெரும் பிரச்சினையாகவுள்ள குடிநீர்ப் பிரச்சினை, வீடு திருத்தம், மின்சாரம், வீட்டுத் திட்டம் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகள் மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் மக்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இதில் ஈ,பி.டி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலென்ரின் (உதயன்), ஈ.பி.டி.பி.யின் யாழ் மாவட்ட அமைப்பாளர் கமலேந்திரன் (கமல்) தென்மராட்சி பிரதேச இணைப்பாளர் சார்ளஸ் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் ஈ.பி.டி.பி. வேட்பாளர்களும் பங்கேற்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X