2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

வடக்கில் முதலாவது ஆசனத்தை ஐ.தே.க. பெற்றுக்கொண்டது

A.P.Mathan   / 2011 ஜூலை 23 , பி.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். மாவட்டத்தின் காரைநகர் பிரதேச சபையில் ஐக்கிய தேசியக் கட்சி தனது முதலாவது ஆசனத்தினை பெற்றுள்ளது. காரைநகர் பிரதேச சபையில் இலங்கை தமிழரசுக் கட்சி 1787 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 1667 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தினையும் ஐக்கிய தேசிய கட்சி 928 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தினையும் பெற்றுக்கொண்டுள்ளன.

காரைநகர் பிரதேச சபை தொகுதியில் செல்லுபடியான வாக்குகள் 4372, நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 333 ஆகவும் பதிவாகியுள்ளன. மொத்தமாக அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 4705 ஆகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .