2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

யாழ். வைத்தியசாலையின் புற்று நோய் பிரிவுக்கான நடை பணம் நாளை யாழ்ப்பாணத்தை வந்தடையும்

Super User   / 2011 ஜூலை 24 , பி.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

யாழ். வைத்தியசாலையில் புற்று நோய் பிரிவை ஆரம்பிப்தற்காக 2 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி திரட்டுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட நடை பயணம் நாளை திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தை வந்தடையவுள்ளது.

கடந்த முதலாம் திகதி மாத்தறை, தெய்வேந்திரமுனையில் இருந்து ஆரம்பமான இந்த நடை பயணம் 25ஆவது நாளான நாளை யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளது.

கடந்த 25 நாட்களில் சுமார் 640 கிலோ மீற்றர் தூரத்தை கடந்துள்ள இந்த நடை பயணம் சுமார் 127 மில்லியன் ரூபாக்களை சேகரித்துள்ளது.

இதன் இறுதி நாள் நிகழ்வுகளில் இலங்கை கிரிக்கெட் அணியின் வீராகளான திலகரட்ன டில்சான் மகெல ஜயவர்த்தனா, குமார் சங்கக்காரா போன்ற பல வீரர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0

  • kulthuran Monday, 25 July 2011 04:21 AM

    நாடு கடந்து வாழும் நம்மவரும் இதற்கு உதவலாமே ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .