2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

புற்றுநோய் வைத்தியசாலைக்கான நடைபவனி யாழ். நகரை வந்தடைந்தது

Suganthini Ratnam   / 2011 ஜூலை 25 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்ப்பாணத்தில் புற்றுநோய் வைத்தியசாலையை அமைக்கும் வகையில் தெய்வேந்திரமுனையிலிருந்து ஆரம்பமான நிதி சேகரிப்பதற்கான நடைபவனி  இன்று திங்கட்கிழமை யாழ். நகரப்பகுதியை வந்தடைந்தது.

யாழ். போதனா வைத்தியசாலை தாதியர் பயிற்சிக் கல்லூரியில் இவர்களுக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், நாளை செய்வாய்க்கிழமை முற்பகல் 11 மணியளவில் வல்வெட்டித்துறையை சென்றடையவுள்ளது.

அத்துடன், யாழ். தெல்லிப்பளையில் புற்றுநோய் வைத்தியசாலைக்கான அடிக்கல் நாட்டு வைபவம் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் இலங்கை கிரிக்கெட் விளையாட்டு வீரர்களான மகேல, முத்தையா முரளிதரன், குமார் சங்கக்கர ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .