2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

'தமிழ், சிங்கள மக்களிடையேயுள்ள இடைவெளியை தேர்தல் முடிவு வெளிப்படுத்துகிறது'

Super User   / 2011 ஜூலை 25 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள், இந்த நாட்டில் சிங்கள, தமிழ் மக்களிடையே உள்ள இடைவெளியை காட்டி நிற்பதாக பேராசிரியர் ஆர்.சிவச்சந்திரன் தெரிவித்தார்.

பல்வேறு நெருக்கடிகளுக்கும் இன்னல்களுக்கும் மத்தியில் வாழ்ந்து வரும் தமிழ் மக்கள் தமக்குரிய தலைமை யார் என்பதை சர்வதேசத்துக்கு அறிவித்துள்ளனர். இந்த செய்தி சர்வதேசத்தின் காதுகளில் ஓங்கி ஒலித்து தமிழ் மக்களுக்கு தீர்க்கமான ஒரு தீர்ப்பு கிடைக்கப் பிரார்த்திக்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தென்பகுதியில் அரசு சார்ந்த கட்சியும், தமிழர் பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வெற்றி பெற்றுள்ளன. இந்த நாட்டின் கடந்த 62 வருட கால வரலாற்றில் தமிழ்த் தேசியத்தை முதன்மைப்படுத்தாத கட்சிகளுக்கு தமிழ் மக்களது ஆணை கிடைக்கவில்லை. தேசிய கட்சிகள் எவற்றுக்கும் தமிழர் பகுதியில் இடமில்லை என்பதனை இடம்பெற்ற தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டி நிற்கின்றன என பேராசிரியர் சிவச்சந்திரன் தெரிவித்தார்.

இலங்கை என்பது ஒரு தேசியம் என்பதனை தமிழ் மக்கள் ஏற்கவில்லை என்பதனைக் கடந்த 62 வருடங்களாக மட்டுமன்றி உள்ளூராட்சித் தேர்தலிலும் மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஒரு நாடு இரு தேசியம் என்பதனையே தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்கின்றனர் என பேராசிரியர் சிவச்சந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.


You May Also Like

  Comments - 0

  • Pavithra Thursday, 28 July 2011 01:16 AM

    இது இப்படித்தான் தேர்தல் அடிப்படையில் தெரிய வேண்டுமா என்ன ? இது அனைவரும் அறிந்த ஒன்று ஹா.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .