2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

கோப்பாய் வித்தியாசாலையின் நூற்றாண்டு மலருக்கு ஆக்கங்கள் கோரல்

Suganthini Ratnam   / 2011 ஜூலை 26 , மு.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்ப்பாணம் கோப்பாயில் பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் பெண்களின்  கல்விக்காக ஆரம்பிக்கப்பட்ட சரஸ்வதி வித்தியாசாலையின் (நாவலர் இந்துக் கலவன் பாடசாலையின் பெண்கள் பிரிவு) நூற்றாண்டு விழாவில் வெளியிடப்படவுள்ள நூற்றாண்டு மலருக்கு ஆக்கங்கள் கோரப்பட்டுள்ளன.

பாடசாலை நிறுவுனர் மனேஜர் மு.சுவாமிநாதன் நினைவு மன்றத்தினரால் வெளியிடப்படவுள்ள இம்மலருக்கு சமுதாயப் பிரமுகர்கள், பழைய மாணவர்கள், முன்னாள் ஆசிரியர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் ஆகியோரிடமிருந்து  பாடசாலை குறித்தும் சரஸ்வதி வித்தியாசாலையில் கல்வி அனுபவங்கள் குறித்தும் நிறுவுனர் குறித்தும் இந்துக் கல்லூரிச் சங்கம் குறித்தும் கட்டுரைகள் கோரப்பட்டுள்ளன.

சரஸ்வதி வித்தியாசாலையின் தோற்றம், தோன்றிய காலத்தில் இந்துப் பெண்களின் கல்வி நிலை, பாடசாலைக்கென நிறுவுனரால் வழங்கப்பெற்ற நிலம் முதலிய வளங்கள், அரசாங்கம் பொறுப்பேற்ற காலத்து நிலைமை, அரசாங்கம் பொறுப்பேற்ற அரச அறிவித்தல் முதலிய வரலாற்றுத் தகவல்களையும் புகைப்படங்களையும் இணைத்து வரலாற்று ஆவணமாக  வெளியிடப்படவுள்ள  மலருக்கு ஆக்கங்கள் வழங்குவோர் எதிர்வரும் 15.8.2011க்கு முன்பாக, ஆக்கங்களை இல. 12, இராமகிருஸ்ண தோட்டம், கொழும்பு -6 எனும் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .