Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2011 ஜூலை 26 , மு.ப. 03:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நேர்மையாகவும் நீதியாகவும் நடைபெறுவதற்கு பங்களிப்பு செய்த மக்கள், அரசியல் கட்சிகள் அனைவருக்கும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் நன்றி தெரிவித்துள்ளார்.
நேற்று திங்கட்கிழமை மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.
நடந்து முடிந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் 16,402 வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருப்பதுடன், 51.47 வீத வாக்குகள் அளிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். முன்னதாக 47 சத வீத வாக்குகள் அளிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. எனினும் இறுதியாக கிடைக்கப்பட்ட புள்ளிவிபரங்களின்படி 51.47 சதவீத வாக்குகள் பெறப்பட்டிருந்ததாக தெரிவித்தார்.
மொத்தமாக 192,694 பேர் வாக்களித்திருந்தனர். அவற்றில் நிராகரிக்கப்பட்டதைத் தவிர 176,292 வாக்குகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் யாழ். அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.
வாக்களிப்பு அமைதியான முறையில் நடைபெற்றமை மகிழ்ச்சிக்குரியதென தெரிவித்த அவர், தமக்கு வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டதென பொதுமக்கள் எந்தவித முறைப்பாடுகளும் செய்யவில்லையெனத் தெரிவித்தார். தேர்தலில் பல நல்ல விடயங்கள் நடந்து முடிந்துள்ளன. ஊடகங்களில் தெரிவிக்கப்பட்ட தவறுகளை தான் உரிய தரப்பினருடன் கலந்தாலோசித்து விரைவாக நடவடிக்கை எடுப்பதாக அரச அதிபர் தெரிவித்தார். அத்தோடு ஊடகவியலாளர்களின் தார்மிக கடமையினை தான் பாராட்டுவதாகவும் தெரிவித்தள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago