2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

காங்கேசன்துறை அபிவிருத்தி பணிகள் இன்று ஆரம்பம்

Kogilavani   / 2011 ஜூலை 26 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(தாஸ், கவிசுகி)
காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி பணிகளை பொருளாதார அபிவிருத்தியமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று உத்தியோகப் பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில், இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா மற்றும் கைத்தொழில் மற்றும் சிறுகைதொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

இங்கு உரையாற்றிய இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா,

இலங்கையின் வடபகுதி மக்களுக்காக இந்திய அரசு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளது. இலங்கை - இந்தியாவின் நட்புறவில் வடபகுதி மக்களுக்காக இந்தியா என்றும் தனது உதவிகளை செய்யும் என்று தெரிவித்தார்.

காங்கேசன்துறைக்கான அபிவிருத்திப் பணிகள் எதிர்வரும் நவம்பர் மாதம் நிறைவடையுமென அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .