2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

ஈ.பி.டி.பி ஆதரவாளர் மீது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தாக்கியதாக புகார்

Super User   / 2011 ஜூலை 26 , பி.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி.) ஆதரவாளரான சந்திரபாலன், வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கான உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அங்கத்தவர் ஒருவர் தலைமையிலான குழுவினால் தாக்கப்பட்டுள்ளதாக ஈ.பி.டி.பி. தெரிவித்துள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இத்தாக்குதலின் போது பன்னாலையில் அமைந்துள்ள சந்திரபாலனின் வர்த்தக நிலையமும் தாக்கி உடைக்கப்பட்டுள்ளதாகவும் தாக்குதல் நடத்திய

மூவரையும் பொதுமக்கள் பிடித்து தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் ஈ.பி.டிபி. அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாக்குதலின் போது படுகாயமடைந்துள்ள சந்திரபாலன் சிகிச்சைக்காக தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் ஈ.பி.டி.பி. சார்பில் போட்டியிட்ட தயாபாலன் என்பவரது சகோதரர் ஆவார்.

இது தொடர்பாக முறைப்பாடொன்று கிடைத்துள்ளதாக தெல்லிப்பளை பொலிஸ்நிலைய அதிகாரியொருவர் தெரிவித்தார். ஆனால் அவர் மேலதிக விபரங்களை தெரிவிக்கமறுத்துவிட்டார்.

இது தொடர்பாக தமிழ்தேசியக் கூட்டமைப்பின் செயலாளரான யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் கேட்டபோது, இத்தகைய சம்பவம் குறித்து தமக்கு தகவல் கிடைக்கவில்லை எனத் தெரிவித்தார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .