2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

நிரந்தர நியமனம் வழங்கக் கோரி தொண்டர் ஆசிரியர்கள் யாழில் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2011 ஜூலை 27 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(தாஸ், கவிசுகி)

தங்களுக்கான நிரந்தர நியமனத்தை வழங்கக் கோரி வடமாகாணத்திலுள்ள முல்லைத்தீவு  மற்றும் வவுனியா கல்வி வலயங்களை சேர்ந்த தொண்டர் ஆசிரியர்கள் யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை கவனயீர்ப்புப் போராட்டமொன்றில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணத்திலுள்ள வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் அலுவலகத்திற்கு முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட தொண்டர் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

இடம்பெயர்ந்து பல துன்பங்களை அனுபவித்து வரும் நிலையிலும் கற்பித்தல் செயற்பாடுகளை நாங்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றோம். தங்களுக்கான சம்பளம் ஒழுங்கான முறையில் வழங்கப்படாது காணப்படுகின்றது. அவற்றையும் ஒழுங்கான முறையில் வழங்குமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .