2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

இலங்கை மின்சாரசபையின் யாழ். அலுவலக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2011 ஜூலை 27 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(தாஸ், கவிசுகி)

சம்பளவு உயர்வு மற்றும் இதர கொடுப்பனவுகளை வழங்குமாறு வலியுறுத்தி இலங்கை மின்சாரசபையின் யாழ். அலுவலக ஊழியர்கள் இணைந்த தொழிற்சங்கப் போராட்டமொன்றில் இன்று புதன்கிழமை ஈடுபட்டனர்.

இலங்கை மின்சாரசபையின் யாழ். அலுவலகத்திற்கு முன்பாக நடைபெற்ற இந்த போராட்டத்தில் சுமார் 150க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

தங்களுக்கான சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படவில்லையென்பதுடன், இதர கொடுப்பனவுகளும் வழங்கப்படவில்லை. அத்துடன், ஆளணிப் பற்றாக்குறை நிலவுகிறது. இவற்றுக்கான தீர்வு கிடைக்காவிட்டால் இலங்கை மின்சாரசபையின் யாழ். அலுவலர்கள் இணைந்து மாபெரும் போராட்டமொன்றை நடத்துவதற்கு தள்ளப்படுமென ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.படப்பிடிப்பு:-தாஸ்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .