2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

நல்லூர் திருவிழா காலத்தில் ஆலய சூழலில் சினிமா பாடல் ஒலிபரப்ப தடை

Super User   / 2011 ஜூலை 27 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். நல்லூர் திருவிழாவை காலங்களில் ஆலய வீதியோரங்களிலும் கடைகளிலும், ஆலய சூழலிலுள்ள வீடுகளிலும் சினிமா பாடல்கள் ஒலிபரப்ப தடை செய்யப்பட்டள்ளதாக யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்தார்.

இன்று புதன்கிழமை மாநகர சபை முதல்வர் தலமையில் நடைபெற்ற நல்லூர் கந்தன் திருவிழா தொடர்பான விசேட கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டள்ளது

இக்கலந்துரையாடலின் போது ஆலய வீதிகளில்  சினிமா பாடல்கள் ஒலிபரப்ப தடை எனவும், பொலுத்தீன் பாவனை முற்றாக தடைசெய்யப்பட வேண்டும் எனவும் முடிவெடுக்கப்பட்டது.

திருவிழா காலங்களின் போது பொது பணிகளில் ஈடுபடும் நிறுவனங்கள், சங்க தலைவர்கள் போன்றவர்களின் பணி தொடர்பாகவும் இக்கூட்டத்தில் ஆராயப்பட்டது.


You May Also Like

  Comments - 0

  • kulathooran Thursday, 28 July 2011 07:57 PM

    சினிமா பாடல் தடை இளசுகளுக்கு பிடியாதுதான். உந்த விடயத்தை அவசியம் அமுல்படுத்தியாகனும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .