2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

யாழ். புற்று நோய் பிரிவுக்கான அடிக்கல்லை நாமல் நாட்டினார்

Super User   / 2011 ஜூலை 27 , பி.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி,கிரிசன்)

யாழ். வைத்தியசாலையின் புற்று நோய் பிரிவு அமைப்பதற்கான அடிக்கல்லை நாடாளுமன்ற உறுப்பினரும் இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் தலைவருமான நாமல் ராஜபக்ஷ தெல்லிப்பளையில் இன்று புதன்கிழமை நாட்டினார்.

இதனை தொடர்ந்து யாழ். துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற புற்று நோய் பிரிவு அமைப்பதற்கான நிதி சேகரிப்பு நடை பயணம் மேற்கொண்டவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்விலும் அவர் கலந்துகொண்டார்.

யாழ். வைத்தியசாலையின் புற்று நோய் பிரிவு அமைப்பதற்காக நிதி சேர்ப்பதற்கு தெவேந்திரமுனையிலிருந்து காங்கேசன்துறை வரை மேற்க்கொண்ட நடை பயணம் யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கில் இடம்பெற்ற பிரமாண்டமான கலை நிகழ்வுடன் நிறைவுபெற்றது.

இந்த நிகழ்வில் இலங்கை கிரிக்கெட் அணி வீரர் மஹேல ஜயவர்தன, யாழ் புற்று நோய் வைத்திய கலாநிதி ஜெயக்குமார், யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி பவானி உட்பட பலர் கலந்துகொண்டனர்.படப்பிடிப்பு:-கிரிசன்


You May Also Like

  Comments - 0

  • bzukmar Thursday, 28 July 2011 03:16 PM

    நாளைய அமைப்பின் தலைவர் ஜனாதிபதியைபோல் தமிழ் மொழியையும் கற்றுக்கொண்டால் தொடர்பாடலுக்கு இலகுவாக அமையும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .