2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

யாழில் மாணவர்கள் இருவர் மாயம்

Suganthini Ratnam   / 2011 ஜூலை 28 , மு.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்ப்பாணத்திலுள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவர்கள் இருவர் கடந்த 26ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அம்மாணவர்களின் பெற்றோர்கள் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.

தரம் 9 இல் கல்வி பயிலும் மாணவர்களான மகாலிங்கம் ரஜீவன் (வயது 14) ஜனார்த்தனன் உஷாந்தன் (வயது 14) ஆகிய இருவருமே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

பாடசாலை முடிவடைந்து வீட்டிற்கு வந்த இந்த மாணவர்கள் இருவரும் தமது கல்வி ஒப்படை  களவேலைக்குச் செல்வதாக தெரிவித்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளனர். இவர்கள் இன்றுவரையில் வீடு திரும்பவில்லையெனவும் பெற்றோர்கள் தங்களது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .