2025 ஜூன் 28, சனிக்கிழமை

குடும்பஸ்தாரை வாளால் வெட்டிவிட்டு வீட்டில் கொள்ளையிட முயற்சி

Kogilavani   / 2011 ஓகஸ்ட் 02 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)
யாழ். இனுவில் மேற்குப் பகுதியிலுள்ள வீடொன்றில் இனந்தெரியாத நபர்கள் புகுந்து அங்கு இருந்தவரை வாளால் வெட்டிவிட்டு கொள்ளையடிக்க முயன்றுள்ளச் சம்பவம் நேற்று நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் இரு பிள்ளைகளின் தந்தையான தம்பிராஜா குமாரநாதன் வயது 33 என்ற நபரே வெட்டுக்காயங்களுக்குள்ளாகிய நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சந்தேக நபர்களில் ஒருவரை பொதுமக்கள் பிடித்து தாக்கிய நிலையில் பொலிஸில் ஒப்படைத்துள்ளனர். பொலிஸார் குறித்த நபரை யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

மேலும் இரு நபர்கள் மோட்டார் சைக்களில் தப்பிச் சென்றதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .