2025 ஜூன் 28, சனிக்கிழமை

மோட்டார் சைக்கிள் மோதி வயோதிபர் பலி

Suganthini Ratnam   / 2011 ஓகஸ்ட் 02 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(தாஸ்)

யாழ்ப்பாணம் பழைய பூங்கா வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை மோட்டார் சைக்கிளில் மோதுண்டு வயோதிபர் ஒருவர் பலியாகியுள்ளார்.

பழைய பூங்கா வீதி சுண்டுக்குளியை சேர்ந்த 6 பிள்ளைகளின் தந்தையான முத்து நடேசன் (வயது  87) என்பவரே இந்த விபத்தில் பலியானவர் ஆவார்.  

குறித்த வயோதிபர் வீதியால் நடந்துசென்றுகொண்டிருந்தபோது அவ்வழியால் வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதிவிட்டு தப்பிச்சென்றுள்ளது.

இந்த நிலையில், படுகாயமடைந்த வயோதிபர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி மரணமானார்.

சடலத்தை பார்வையிட்ட யாழ். நீதவான் ஆனந்தராஜா, அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டதுடன் பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .