2025 ஜூன் 28, சனிக்கிழமை

பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களில் பங்கேற்க அமைச்சர் பசில் யாழ். விஜயம்

Suganthini Ratnam   / 2011 ஓகஸ்ட் 25 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களில் பங்கேற்பதற்காக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று வியாழக்கிழமை யாழ். குடாநாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக  அந்த மாவட்டத்தின் அரசாங்க அதிபர்  இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தின் அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம், மீளக்குடியேறிய பகுதிகளில் நடைபெற்று வரும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக நேரில் ஆராய்வதற்காக அமைச்சர் பசில் ராஜபக்ஷ யாழ். குடாநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, யாழ். பொதுநூலகத்தில் இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்ற அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டத்திற்கு செய்தி சேகரிப்பதற்காகச் சென்ற யாழ். பத்திரிகைகளின் பத்திரிகையாளர்கள் மற்றும் சுயாதீன ஊடகவியலாளர்கள் சிலர் மீளாய்வுக் கூட்ட மண்டபத்திலிருந்து அரசியல் கட்சி முக்கியஸ்தர் ஒருவரினால் வெளியேற்றப்பட்டனர்.  

அரச சார்பு ஊடகங்களைச் சார்ந்தவர்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்க முடியுமெனவும் ஏனைய ஊடகவியலாளர்களை வெளியேறுமாறு எச்சரிக்கை செய்து மண்டப நுழைவாயில் வரை தோளைப் பிடித்து தள்ளிக்கொண்டு வரப்பட்டனர். ஏனைய ஊடகவியலாளர்கள் வெளியேற்றப்பட்டதுடன், நூலக வளாகத்தை விட்டு வெளியேறுமாறும் பாதுகாப்பு பிரிவினரினால் தெரிவிக்கப்பட்டது. இதன்போது ஒன்பதுக்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் வெளியேறிச் சென்றனர்.

அரச சார்பு ஊடகவியலாளர்கள் மட்டும் அங்கு நடைபெற்ற நிகழ்வுகளை பதிவுசெய்து கொண்டிருந்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .