2025 ஜூன் 28, சனிக்கிழமை

பொதுமக்கள் தமிழ் மொழியில் முறைப்பாடுகளை பதிவு செய்யலாம்: பிரதி பொலிஸ் மா அதிபர்

Super User   / 2011 ஓகஸ்ட் 28 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

யாழ். மாவட்ட பொலிஸ் நிலையங்களில் பொதுமக்கள் தமது முறைப்பாடுகளை செய்வதில் காணப்படும் மொழி குறைபாட்டை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் என்.டி.தளுவத்த பொதுமக்களுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்தள்ளார்.

இதற்கினங்க பொதுமக்கள் முறைப்பாடுகளை தமிழில் எழுதி கொடுப்பதற்கான படிவங்களை யாழ். மாவட்ட பொலிஸ் நிலையங்களில் அறிமுகம் செய்துவைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த புதிய நடைமுறையினை பொதுமக்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .