2025 ஜூன் 28, சனிக்கிழமை

யாழில் அச்சமற்ற சூழ்நிலையை ஏற்படுத்த பொலிஸார் நடவடிக்கை

Suganthini Ratnam   / 2011 ஓகஸ்ட் 29 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். மாவட்டத்தில் நடைபெற்று வரும் திருட்டுச் சம்பவங்களை கட்டுப்படுத்தி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக யாழ். பொலிஸாரினால் விசேட திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையம் அறிவித்துள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி அச்சமற்ற ஒரு சூழ்நிலையைத் தோற்றுவிப்பதற்காக கிராமிய மட்டங்களிலுள்ள சிவில் அமைப்புகளுடன் கலந்துரையாடி  அவர்களின் பிரதேசங்களில் விழிப்புக்குழுக்களை அமைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் யாழ். பொலிஸ் நிலையம் தெரிவித்துள்ளது.

திருடர்களின் தொல்லைகள் காரணமாக பொதுமக்கள் அச்சமான நிலையில் இரவுப்பொழுதைக் கழிப்பதாகவும் அம்மக்களின் சொத்துக்களைப் பாதுகாத்து அச்சமற்ற ஒரு சூழலை எற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் யாழ். பொலிஸ் நிலையம் குறிப்பிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .