2025 ஜூன் 28, சனிக்கிழமை

போருக்கு பின்னரும் வன்முறைகளினால் மக்கள் பாதிப்பு: யாழில் சர்வமதப் பிரதிநிதிகள்

Menaka Mookandi   / 2011 ஓகஸ்ட் 30 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

போருக்கு பின்னரும் மக்கள் பல வன்முறைச் சம்பவங்களினால் பாதிக்கப்படுவதாகவும், மக்களிடையே இன ஐக்கியத்தையும் ஒற்றுமையையும் சமூக நல்லுறவையும் மதங்களின் ஊடாகவே ஏற்படுத்த முடியும் என சர்வமதப் பிரதிநிதிகள் யாழில் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போனோருக்கான சர்வதேச தினம் இன்று 30ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சர்வதேச ரீதியில் அனுஷ்டிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு யாழ். ரிம்மர் மண்டபத்தில் இன்று காலை சர்வமதத்தவர்களின் விசேட பிரார்த்தனையொன்று நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட சர்வமதப் பிரதிநிதிகள், 'நாட்டில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பீதியின் காரணமாக மக்கள் பலர் பல்வேறு பிரச்சினைகளுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இதனால் மக்கள் மனங்களின் அமைதியில்லை. பீதியுடன் ஒவ்வொரு இரவுப்பொழுதையும் கழிக்கின்றார்கள்.

மனித மனங்களை யாரும் காயப்படுத்த வேண்டாம். மக்களின் நல்வாழ்வுக்காக அனைவரும் பிரார்த்தனை செய்து இந்நாட்டில் அமைதியை ஏற்படுத்த முயற்சிப்போம்.

மனித மனங்களின் அமைதியையும் சாந்தியையும் மதங்களினால் தான் ஏற்படுத்த முடியும். மதங்கள் அனைத்தும் இணைந்து இனங்களுக்கிடையில் ஒற்றுமையையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்த முனைகின்றோம' என்றனர்.

யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டிருக்கும் சர்வமதப் பிரதிநிதிகள், நாவாந்துறையில் அண்மையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தினால் பாதிப்படைந்த மக்களையும், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நோயாளர்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதோடு அவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் எனப் பிரார்த்தனை செய்யவுள்ளதாகவும் சர்வமதப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .