2025 ஜூன் 28, சனிக்கிழமை

நாவாந்துறை மோதல்; மனித உரிமைகள் ஆணைக்குழுவில் எழுத்து மூல முறைப்பாடுகள் பதிவுசெய்யப்படவில்லை

Menaka Mookandi   / 2011 ஓகஸ்ட் 30 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். நாவாந்துறையில் பொதுமக்களுக்கும் படையினருக்கும் இடையில் நடைபெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக எழுத்து மூல முறைப்பாடுகள் எதனையும் இதுவரை செய்யவில்லை என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்துள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை யாழ். ரிம்மர் மண்டபத்தில் நடைபெற்ற சர்வமதப் பிரார்த்தனை முடிவில் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போது அவர் அவ்விதம் குறிப்பிட்டுள்ளார்.

நாவாந்துறையில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக தங்களது உறவினர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், அவர்களது விடுதலை குறித்து கவனம் செலுத்துமாறு வாய்மூலம் சொல்லப்பட்டதே தவிர இன்றுவரை இச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எழுத்து மூல முறைப்பாடுகள் எதனையும் தெரிவிக்கவில்லை.

மோதலின் போது சேதமாக்கப்பட்ட சொத்துகள் பற்றியும் பொதுமக்கள் மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு எதனையும் பதிவு செய்யவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .