2025 ஜூன் 28, சனிக்கிழமை

டெங்கு நோய் காரணமாக ஆறு வயது சிறுமி உயிரிழப்பு

Kogilavani   / 2011 ஓகஸ்ட் 31 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

டெங்கு நோய் காரணமாக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வந்த ஆறு வயதுச் சிறுமியொருவர்  சிகிச்சை பயனின்றி நேற்று செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் திருமதி பவானி பசுபதிராஜா தெரிவித்தள்ளார்
பருத்தித்துறை ஏ.எம் வீதியைச் சேர்ந்த சுரேஷ் அபர்ணா வயது 6 என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த  சிறுமி டெங்கு நோய்க்  காரணமாக முதலில் மந்திகை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். பின் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்துள்ளதாக யாழ். போதனா வைத்திய சாலைப் பணிப்பாளர் திருமதி பவானி பசுபதிராஜா மேலும் தெரிவித்தார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .