Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2011 செப்டெம்பர் 02 , மு.ப. 03:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். குருநகர் சின்னக்கடை சந்தைப் பகுதியில் இனந்தெரியாத நபர் ஒருவர் நடமாடியதான விவகாரம் தொடர்பில் பொதுமக்களுக்கும் படையினருக்கும் இடையில் முறுகல் நிலையேற்பட்டது.
குருநகர் சின்னக்கடை சந்தைப் பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் இனந்தெரியாத நபர் ஒருவர் ஓடுவதைக் கண்ட பொதுமக்கள் அம்மர்ம மனிதனை விரட்டிச் சென்றபோதே பொதுமக்களுக்கும் படையினருக்கும் இடையில் முறுகல் நிலையேற்பட்டது.
இந்த நிலையில், அப்பகுதியில் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். குருநகர் தண்ணீர்த்தாங்கி வீதி தொடக்கம் சின்னக்கடைப்பகுதி, றெக்கிளமேசன் மற்றும் அண்ணாசிலைப்பகுதி வரை படையினர் பெருமளவில் காணப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
இனந்தெரியாத நபரின் நடமாட்டம் காரணமாக அச்சமடைந்துள்ள அப்பகுதிமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருந்தனர்.
இதேவேளை, யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலும் நேற்று வியாழக்கிழமை இரவு இனந்தெரியாத நபர்கள் நடமாடியதாக தெரியவருகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
40 minute ago
55 minute ago