2025 மே 19, திங்கட்கிழமை

மாணவியை காணவில்லையென யாழ். பொலிஸில் முறைப்பாடு

Suganthini Ratnam   / 2011 செப்டெம்பர் 15 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்,கவிசுகி)

தனியார் கல்வி நிறுவனத்திற்கு செல்வதாக கூறிச் சென்ற மாணவி கடந்த ஐந்து நாள்களாக வீடு திரும்பவில்லையென அம்மாணவியின் பெற்றோர் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

யாழ். வண்ணார்பண்ணையைச் சேர்ந்த மாணவியே காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர் தனிப்பட்ட முறையில் எங்காவது சென்றாரோ அல்லது எவராவது கடத்திச் சென்றார்களா என்பது தொடர்பில் எதுவும் தெரியவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவரைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X