Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2011 செப்டெம்பர் 28 , மு.ப. 08:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். நீதிமன்ற வளாகத்துக்குள் கைதியொருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்த யாழ். கோப்பாய் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த ஏழு பொலிஸ் அதிகாரிகளும் தலா 50ஆயிரம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் செல்ல யாழ். நீதிமன்றம் இன்று புதன்கிழமை அனுமதி வழங்கியது.
கோப்பாய் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த 2 பொலிஸ் சார்ஜன்களும் 5 பொலிஸ் கான்ஸ்டபிள்களுமே இவ்வாறு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 19ஆம் திகதி யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் வழக்கு விசாரணைக்காகக் கொண்டுவரப்பட்ட சந்தேக நபர் ஒருவர் சட்டத்தரணிகள் முன்னிலையில் பொலிஸாரால் தாக்கப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக பொலிஸ் அதிகாரிகளை சேவையிலிருந்து இடைநிறுத்துமாறு பொலிஸ்மா அதிபர் என்.கே.இளங்கக்கோன் பணிப்புரை விடுத்திருந்தார். இந்நிலையில், அவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்ட போது பிணையில் செய்ய நீதவான் அனுமதி வழங்கினார்.
இந்தச் சம்பவத்தைக் கண்டித்து யாழ்.மாவட்ட சட்டத்தரணிகள் கடந்த 20ஆம் திகதி முதல் தமது பணிகளைப் பகிஷ்கரித்து வந்தனர். எதிர்காலத்தில் நீதிமன்றத்தினை அவமதிக்கக் கூடிய இவ்வாறான செயல்கள் நடைபெறாது என்ற உத்தரவாதம் வழங்கப்படும் வரையில் தமது பகிஷ்கரிப்புத் தொடருமென அவர்கள் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், தங்களது பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டத்தைத் தொடர்வதா? இல்லையா என்பது குறித்து நாளை கூடி ஆராயவுள்ளதாக யாழ். சட்டத்தரணிகள் சங்க சட்டத்தரணி உறுப்பினர் மு.ரெமிடியஸ் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
18 May 2025
18 May 2025