Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 02 , மு.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். மாவட்ட படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் 2011ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
யாழ். சிவில் அலுவல்கள் பொதுமக்கள் தொடர்பகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார், யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்னம், யாழ். மாநகரசபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 54 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், மாணவர்களின் கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
5 hours ago