Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 05 , மு.ப. 09:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
யாழ்ப்பாணம் வலி. தெற்கு பிரதேசசபையின் சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
கடந்த சனிக்கிழமை உழவு இயந்திர சாரதியினால் வேலை மேற்பார்வையாளர் ஒருவர் தாக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து, பாதிக்கப்பட்ட ஊழியர் பிதேசசபைச் செயலாளரின் கவனத்திற்கு எழுத்து மூலம் கொண்டு வந்ததைத் தொடர்ந்து குறித்த உழவு இயந்திர சாரதி ஒழுக்காற்று விசாரணைக்காக இடைநிறுத்தப்பட்டார்.
இந்த நிலையில் சுகாதார வாரத்தையொட்டி உழவு இயந்திர சாரதிக்குப் பதிலாக புதியவர் ஒருவரை தற்காலிகமாக நியமித்து குப்பைகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே வலி. தெற்கு பிரதேசசபையின் சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
வலி. தெற்கு பிரதேசசபையின் சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் மேற்கொள்வது குறித்து எந்தவித முன்னறிவித்தலும் கொடுக்காததாலும் வேலைக்குச் செல்லாததாலும் சுன்னாகம் பொலிஸாருக்கு வலி. தெற்கு பிரதேசசபையால் அறிவிக்கப்பட்டது. சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் இது தொடர்பில் விசாரணை மேற்கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
5 hours ago