2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

யாழில் மனவளக்கலை பயிற்சிகள்

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 06 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கபில்)

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 8ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை 'முழுமை நலவாழ்வுக்கு மனவளக்கலை யோகா' என்ற தலைப்பில் மனவளக்கலை பயிற்சிகள் நடைபெறவுள்ளன.

மனவளக்கலை பேராசிரியர் அருள்நிதி சி.முருகானந்தவேலின் தலைமையில், தமிழக மனவளக்கலை பேராசிரியர் அருள்நிதி கு.கணேசனால் இப்பயிற்சிகள் நடத்தப்படவுள்ளன.

யாழ்ப்பாணத்தின் இணுவில் பரராசசேகரப்பிள்ளையார் மணி மண்டபத்தில மனவளக்கலை பயிற்சிகள் நடைபெறவுள்ளன. தினமும் இரண்டு மணிநேரம் நடைபெறும்  இப்பயிற்சி வகுப்புக்களில் அறிமுக விளக்கவுரை, காயகல்பப்பயிற்சி, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான எளியமுறை, உடற்பயிற்சிகள், மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான தியானப்பயிற்சி ஆகிய பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

கடந்த வாரம் வவுனியா குருமண்காடு காளிகோவில் மண்டபத்திலும் மேற்படி மனவளக்கலை பயிற்சிகள் வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .