2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

யாழ். குடாநாட்டின் பிரதேச எல்லைகளை மீளமைத்தல் தொடர்பான விஷேட மாநாடு

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 06 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். குடாநாட்டில் பிரதேச செயலகங்களின் உள்ள எல்லைகளை மீளமைத்தல் தொடர்பான விஷேட மாநாடு யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றுள்ளது.

பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் சில முன்மொழிவுகள் எடுக்கப்பட்டன.

தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவை இரண்டு பிரிவுகளாக வரையறை செய்தல் அதில் ஒன்று தென்மராட்சி கிழக்கு கொடிகாமம் என்றும் மற்றையது தென்மராட்சி மேற்கு சாகவச்சேரி எனப் பிரிப்பது, கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவை இரண்டாக பிரிப்பது அதில் ஒன்று வலிகாமம் கிழக்கு கோப்பாய் மற்றையது வலிகாமம் கிழக்கு அச்சுவேலி எனப்பிரிப்பது, யாழ். பிரதேச செயலகங்களில் சனத்தொகையின் பிரகாரம் கிராம சேவையாளர் பிரிவுகளைக் கூட்டுதல், காரைநகர், நெடுந்தீவு, ஊர்காவற்துறை, மருதங்கேணி ஆகிய நான்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளை பிரதேச செயலகங்களாக தரம் உயர்த்துதல் என்ற முன்மொழிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த முன்மொழிவுகளின் அடிப்படையில் யாழ். மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், ஈபிடிபி நாடாளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமல்டா சுகுமார், மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .