2025 ஜூன் 26, வியாழக்கிழமை

வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவேன்: அமைச்சர் டக்ளஸ்

Super User   / 2011 டிசெம்பர் 12 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

வட மாகாண சபைக்கான தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக தான் போட்டியிடவுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் (ஈ.பி.டி.பி) தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஈ.பி.டி.பி கட்சியின் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

வட மாகாண சபைக்கான தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவீர்களா? என ஊடகவியலாளரொருவர் அமைச்சர் டக்ளஸிடம் வினவியதற்கு, இந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளரை நானே தீர்மானிப்பேன் என கூறினார்.

இந்த முதலமைச்சர் பதவியின் ஊடாக தமிழ் சமூகத்திற்கு இன்னும் பல சேவைகளை செய்ய முடியும் எனவும் அவர் கூறினார்.

எனினும், அமைச்சரவையிலுள்ள ஒரே ஒரு தமிழ் அமைச்சரான என்னை இழக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு விருப்பமில்லை என அமைச்சர் டக்ளஸ் மேலும் தெரிவித்தார். Pix By:Pradeep Dilrukshana

 

 


You May Also Like

  Comments - 0

  • ilakijan Monday, 12 December 2011 08:48 PM

    அதுசரி இவ்வளவு விசுவாசம் காட்ட உங்களை விட்டால் உலகில் யார் உளர்!

    Reply : 0       0

    neethan Monday, 12 December 2011 08:57 PM

    துணிச்சலாக சுதந்திர கூட்டைமைப்பின் முதலமைச்சர் வேட்பாளரை நீங்களே தீர்மானிப்பதாக கூறுவதை பாராட்டினாலும், ஜனாதிபதி அமைச்சரவையிலிருந்து உங்கள் இழப்பை விரும்பவில்லை என கூறுவது பொடிவைப்பதாகவுள்ளது,கருணா அம்மான் நிலை என்ன? முதலமைச்சர் வேட்பாளர் தாங்களே. தோல்வி மட்டும் நிச்சயம்.

    Reply : 0       0

    சிறாஜ் Monday, 12 December 2011 10:00 PM

    நடக்காததை சொல்லி என்ன பலன் இருக்கு? என்னமோ உங்கள் விதி.

    Reply : 0       0

    naren Monday, 12 December 2011 11:31 PM

    அப்போ ஆறுமுகன் தொண்டமான் யாருங்கோ...? அவரும் சிங்களவரா....?

    Reply : 0       0

    Ram Monday, 12 December 2011 11:55 PM

    அமைச்சர் அவர்கள் முதலமைச்சர் ஆனால் மட்டுமே தமிழ் மக்களுக்கு விடிவு கிடைக்கும்.....

    Reply : 0       0

    PUTTALA MANITHAN Tuesday, 13 December 2011 12:15 AM

    அப்படி என்றால் கருணா அம்மான் யாருங்கோ?

    Reply : 0       0

    PUTTALA MANITHAN Tuesday, 13 December 2011 12:21 AM

    நீங்கள் தைரியம் இருந்தால் உங்கள் அமைச்சு பதவியை ராஜினமா செய்து விட்டு வட மாகாண சபைக்கான தேர்தலில் முதலமைச்சராக போட்டி இடுங்கள் பார்ப்போம்.

    Reply : 0       0

    Dilan Tuesday, 13 December 2011 12:41 AM

    கருணா அம்மான் பிரதியமைச்சருங்கோ

    Reply : 0       0

    PUTTALA MANITHAN Tuesday, 13 December 2011 01:18 AM

    மிஸ்டர் டிலான் : கருணா அம்மான் பிரதி அமைச்சராக இருக்கட்டும், பிரதி இல்லாத அமைச்சராக இருக்கட்டும் பிரச்சினை அது அல்ல . அமைச்சரவையில் தமிழ் பேசு பவர் இவர் மட்டும் தானா ? அப்படியன்றால் மற்றவர்கள் எல்லாம் சிங்களவர்களா ? முஸ்லிம் அமைச்சர்களும் தமிழ் தான் பேசுகிறார்கள். அவர்கள் யன்ன அரேபியா பேசுகிறார்கள் இல்லையே. செந்தமிழ் பேசும் அமைச்சர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள் ..

    Reply : 0       0

    Lavanya Tuesday, 13 December 2011 03:39 AM

    அவர் குறிப்பிடுவது வட கிழக்கை சார்த்த அமைச்சரவை அந்தஸ்து உள்ள அமைச்சர்கள் யாரும் இல்லை என்று ...

    Reply : 0       0

    ruban Tuesday, 13 December 2011 03:52 AM

    எல்லாம் முடிந்தது இது வேறா?

    Reply : 0       0

    PUTTALA MANITHAN Thursday, 15 December 2011 01:11 AM

    லாவண்யா அவர் என்ன கூறியுள்ளார் என்று வாசித்து பாருங்கள் அமைச்சரவையில் உள்ள ஒரே ஒரு தமிழ் அமைச்சர் என்றுதான் கூறியுள்ளார் . வட கிழக்கில் உள்ள அமைச்சர் என்று கூறவில்லை.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .