2025 ஜூன் 26, வியாழக்கிழமை

யாழ். விடுதிகளை பொலிஸ் கண்காணிப்பு வலயத்திற்குள் கொண்டுவர நடவடிக்கை

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 15 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். குடாநாட்டில் கலாசார விழுமியங்களைப் பேணுவதற்காக அங்குள்ள விடுதிகள் அனைத்தும் பொலிஸாரின் விசேட கண்காணிப்பு வலயத்திற்குள் கொண்டுவரப்படவுள்ளதாக  யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரி.இந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

'யாழ்ப்பாணத்திலுள்ள சில விடுதிகளில் மறைமுகமாக தமிழ் கலாசாரங்களுக்கு ஒவ்வாத நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இவற்றைத் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

விடுதிகளில் விபசாரம் செய்பவர்கள் கைதுசெய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள்.

தமிழர் பண்பாட்டைச் சீரழிப்பதற்காக திட்டமிட்ட வகையில் தென்பகுதியைச் சேர்ந்த ஒருசில இடைத்தரகர்கள் இதில் ஈடுபட்டு வருவதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. யாழ்ப்பாணத்தில்  விடுதி நடத்துபவர்கள் தமிழர் பண்பாட்டை பேணும் முகமாக நடத்துமாறும் கேட்டுக்கொள்கின்றோம்' என்றார்.


You May Also Like

  Comments - 0

  • neethan Thursday, 15 December 2011 04:16 PM

    பிரதி பொலிஸ் மா அதிபர், சிவில் சமூகத்தினரையும் உள்வாங்கி கண்காணிப்பு நடவடிக்கை செய்வது இன்னும் காத்திரமான பலனை வழங்கும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .