2025 மே 17, சனிக்கிழமை

இந்திய மீனவர்களின் அத்துமீறிய வடகடல் மீன்பிடியைத் தடுக்கமுடியவில்லை: எஸ்.ரவீந்திரன்

Suganthini Ratnam   / 2012 ஜனவரி 09 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

வடகடலில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுக்கமுடியாத நிலையில் தாம் உள்ளதாக யாழ். பிராந்திய கடற்றொழில் நீரியல்வள திணைக்களப் பணிப்பாளர் எஸ்.ரவீந்திரன் தெரிவித்தார்

யாழ். பிராந்திய கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

வடகடலில் இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே இந்திய மீனவர்கள் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாகவும் இதனால் வடகடல் மீனவர்களின் கடற்றொழில் உபகரணங்கள் பல அழிக்கப்பட்டுள்ளதாகவும் எஸ்.ரவீந்திரன் குறிப்பிட்டார்.

இந்திய மீனவர்களை வடகடலுக்குள் வரவிடாது தடுப்பதற்கான நடவடிக்கைகள் எதுவும் சாத்தியப்படவில்லை. இவர்கள் வடகடலில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதைத் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை இலங்கை மற்றும் இந்திய அரசுகளே மேற்கொள்ள வேண்டும்.  இது இரு நாடுகளின்  பரஸ்பர உறவுகளில் தங்கியிருப்பதாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .