2025 மே 17, சனிக்கிழமை

யாழில் அதிகரித்துள்ள திருட்டு சம்பவங்களை கட்டுப்படுத்த பொலிஸார் இரவில் வீதிரோந்து

Menaka Mookandi   / 2012 பெப்ரவரி 02 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழில் அதிகரித்துள்ள திருட்டுச் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் இரவு நேரங்களில் வீதிரோந்தில் ஈடுபடவுள்ளனர் என்று யாழ்.பொலிஸ் தலைமைப் பொறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக அதிகளவில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற வண்ணமுள்ளன. அவற்றைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் வீதிரோந்தில் ஈடுபட்டு மக்களின் உடமைகளுக்கு பாதுகாப்பாக இருப்பார்கள்.

மாடு திருட்டில் இருந்து வீடு உடைத்து உடமைகள் திருட்டுக்கள் தொடர்பாக ஜனவரி மாதத்தில் மட்டும் 86 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவற்றுக்கான சட்ட நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .