2025 மே 17, சனிக்கிழமை

யாழில் மலசலகூடக் குழியிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2012 பெப்ரவரி 05 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்ப்பாணம், தாவடிப் பகுதியில் மலசலகூடக் குழியொன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை இரவு மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சடலத்தில் பாரிய வெட்டுக் காயங்கள் காணப்படுவதாகத் தெரிவித்த பொலிஸார், கொலை செய்யப்பட்டு மலசலகூடக்  குழிக்குள் சடலத்தை வீசியிருக்கலாமென தாம் சந்தேகிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

பிரேத பரிசோதனைக்காக சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவரது மரணம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சுன்னாகம் பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .