Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Kogilavani / 2012 பெப்ரவரி 14 , மு.ப. 05:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ்.நெடுந்தீவு கடற்கரை பாதுகாப்பு அணைகள் பாரிய சேதமடைந்துள்ள காரணத்தால் அக்கிராமங்களை கடல் நீர் காவுகொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கடையோரக் குடியிருப்பாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இவ் அணை கடந்த 30 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டுள்ளது. உரிய நிர்வாகங்களின் பராமரிப்பின்மையால் அணை முற்றாகச் சேதமடைந்துள்ளது.
மக்கள் குடியிருப்புகளுக்கும் கடல்நீருக்கும் இடையே சிறிய தூரமே காணப்படுவதால் இதனை புனரமைத்துத் தருமாறு ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் பிரரேரணைகள் சமர்ப்பித்தபோதும், இதுவரை எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வை வழங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
16 May 2025
16 May 2025