2025 மே 17, சனிக்கிழமை

நாய்கள் சத்தமிட்டதால் அயல் வீட்டாருக்கு தொந்தரவு; உரிமையாளருக்கு அபராதம்

Menaka Mookandi   / 2012 பெப்ரவரி 24 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

வீட்டுக்கு வெளியில் நாய்களை கூட்டில் அடைத்து அந்த நாய்கள் போடும் சத்தத்தினால் அயல் வீட்டாரின் நிம்மதியைக் கெடுத்தார் என்ற குற்றச்சாட்டில் யாழ். நாவலர் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு யாழ்.நீதிவான் நீதிமன்றம் 1000 ரூபா அபராதம் விதித்துள்ளது.

யாழ். நாவலர் பகுதியில் வீட்டுக்கு வெளியில் நாய்க்கூடு அமைத்து நாய்களை அடைத்து வைத்து அது பொதுமக்களின் போக்குவரத்திற்கு மற்றும் அயல் வீட்டாரின் நிம்பதியைக் கெடுத்ததன் காரணமாக கோப்பாய் பொலிஸார் நாய்களின் உரிமையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு இன்று வெள்ளிக்கிழமை யாழ்.நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குற்றத்தை ஒப்புக்கொண்ட நாய்களின் உரிமையாளருக்கு 1000 ரூபா அபராதம் விதித்து  யாழ்.நீதிமன்ற நீதிவான் மா.கணேசராசா தீர்ப்பு வழங்கினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .