2025 ஜூன் 25, புதன்கிழமை

வடக்கிற்கான புகையிரத பாதை அமைக்கும் பணிகள் துரிதம்

Super User   / 2012 மார்ச் 03 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹேமந்த்)

வட பகுதிக்கான புகையிரத பாதையை புனரமைக்கும் பணிகள் துரிதமாக்கப்பட்டுள்ளன. யுத்தத்தின் காரணமாக வட பகுதிக்கான புகையிரத பாதைகள் முற்றாகவே அழிவடைந்துள்ளன. இதனை மீளவும் புனரமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்திய அரசின் உதவி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்தப் புகையிரத பாதை தற்போது ஓமந்தை வரை புனரமைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்த அடுத்த கட்ட புனரமைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன்படி மாங்குளம், முறிகண்டி,  கொக்காவில், கிளிநொச்சி, பரந்தன் மற்றும் ஆனையிறவு ஆகிய இடங்களில் பெருந்தொகையான தண்டவாளங்கள் புனரமைப்புக்காக நூற்றுக்கு மேற்பட்ட கனரக வாகனங்களிலிருந்து இறக்கப்படுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .