2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

ஆயுதமேந்தியவர்கள் மக்களின் அரசியல் உரிமையை பெற்றுக் கொடுக்க அரசுடன் ஒத்துழைப்பு வேண்டும்: சந்திரகுமா

Menaka Mookandi   / 2012 மே 28 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கவிசுகி)

'வட, கிழக்கில் ஆயுதமேந்திய குழுக்கள் ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் இணைந்தால் மாத்திரம் போதாது. தன்னின மக்களின் அரசியல் உரிமையைப் பெற்றுக்கொடுக்க அரசின் ஒன்றிணைந்த செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் தெரிவித்தார்.

யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று திங்கள் கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற சட்டவாக்கங்கள் பற்றிய பயிற்சிப்பட்டறையில் 'இலங்கை நாடாளுமன்ற விவாதம் சம்பந்தமான விதிமுறைகள்' தொடர்பாக கருத்துரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், நாடாளுமன்றில் மக்களின் குறைகள், மக்களின் உரிமைகள், நடைமுறை அரசியல் பற்றி வவாதிப்பவர்கள் மக்களின் தேவைகளை நிறைவு செய்வதற்கு அரசுடன் இசெயற்திட்டத்திற்கு முன்வருவதில்லை.

மக்களின் நடைமுறைப் பிரச்சினைகளை நாடாளுமன்றில் தெரிவித்து முழக்கமிட்டாலும் அவர்களின் தேவைகளுக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து கொடுப்பதற்கு ஒன்றிணைந்த வேலைத்திட்டத்திற்கு தங்கள் பங்களிப்பை வழங்காமல் இருப்பது மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் அந்த மக்களுக்கு செய்யும் தூரோகமாகவே நான் கருதுகின்றேன் என்றார்.

இந்த பயிற்சிப்பட்டறையில் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் சுமேதா ஜி.ஜயசேன, சிரேஸ்ட அமைச்சர் டியூகுணசேகர, யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் மற்றும் யாழ்.மாவட்ட செயலளர் சுந்தரம் அருமைநாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .