2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மீன்பிடிக்க சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்ட தங்கூசிவலைகள் தீ வைத்து அழிப்பு

Suganthini Ratnam   / 2012 ஜூன் 06 , மு.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கவிசுகி)


யாழ். குடாநாட்டில் மீன்பிடிப்பதற்கு சட்டவிரோமாக பயன்படுத்தப்பட்ட தங்கூசி வலைகள் நேற்று செவ்வாய்க்கிழமை தீ வைத்து அழிக்கப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களப் பணிப்பாளர் எஸ்.கணேசமூர்த்தி தெரிவித்தார்.

மீனவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட இத்தங்கூசி வலைகள் யாழ். நீதிமன்ற உத்தரவுக்கு அமைய கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை திணைக்களத்தில் உதவிப்பணிப்பாளர் ந.கணேசமூர்த்தி தலைமையில்  அதிகாரிகளினால் தீ வைத்து அழிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தங்கூசி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதற்கு அரசாங்கம் வர்த்தமானி மூலம் தடைசெய்தது. இருப்பினும்  சில மீனவர்கள் சட்டவிரோதமாக தங்கூசிவலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டனர்.

குருநகர் மற்றும் பாஷையூர் பகுதிகளில் தங்கூசி வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டவர்கள் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது
இவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன், தங்கூசிவலைகள் நீதிமன்றத்தினால்; பறிமுதல் செய்யப்பட்டிருந்தன.

இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட தங்கூசி வலைகளே கடற்றொழில் மற்றும் நீரியல்வள திணைக்களத்தினால் தீ வைத்து அழிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X