2025 மே 19, திங்கட்கிழமை

வர்த்தகர்களிடம் பணமோசடி செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபருக்கு விளக்கமறியல்

Menaka Mookandi   / 2012 ஜூன் 07 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

வர்த்தக நடவடிக்கைகளுக்காக ஏனைய வர்த்தகர்களிடம் பணத்தைப் பெற்று ஏமாற்றிவந்தவர் என கூறப்படும் மாணிக்கம் தனபாலசிங்கம் என்ற வர்த்தகரை எதிர்வரும் 21ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிமன்ற நீதிவான் மா.கணேசராசா உத்தரவிட்டுள்ளார்.

குறித்த நபர் வர்த்தக நடவடிக்கைகளுக்காக சக வர்த்தகர்களிடமிருந்து 16 இலட்சம் ரூபாவை வாங்கி ஏமாற்றியுள்ளார் என இவருக்கு எதிராக குற்றப்பத்திரம் விசேட குற்றத்தடுப்பு பிரிவினரினால் யாழ்.நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைகளுக்காக எதிர்வரும் 21ஆம் திகதி வரை ஒத்திவைத்ததுடன் சாட்சிகளையும் மன்றில் அன்றைய தினம் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X