2025 மே 19, திங்கட்கிழமை

யாழ். கோவில்களில் சாமி வாகனத்திருட்டு; வலையமைப்பைச் சேர்ந்த நால்வர் கைது

Menaka Mookandi   / 2012 ஜூன் 13 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜெ.டேனியல், எஸ்.கே.பிரசாத்)


யாழ். இந்து கோவில்களில் சாமி வாகனத் திருட்டில் ஈடுபட்ட வலையமைப்பைச் சேர்ந்த நான்கு பேர் இன்று புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில் விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். கொக்குவில் பொற்பதி விநாயகர் கோவில் மற்றும் கொண்டலடி விநாயகர் கோவில்களில் திருடப்பட்ட பல இலட்சம் ரூபா பெறுமதியான சாமி வாகனங்கள், பித்தளையிலான சாமி சிலைகள் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

யாழ். மூலவைச் சந்தியில் உள்ள மரக்காலை ஒன்றில் கனரக வாகனம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலை அடுத்து கொழும்புக்கு ஏற்றப்பட இருந்த நிலையில் இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

யாழில் பல இந்துக் கோவில்களில் இருந்து திருடப்பட்ட சாமி வாகனங்கள் தொடர்பாக விசேட விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இன்னும் பலர் கைது செய்யப்படலாம் எனவும் யாழ். பொலிஸ் நிலைய உப பரிசோதகர் எஸ்.குணசிங்கம் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X