2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழ். மாநாகர சபை ஊழியர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

Menaka Mookandi   / 2012 ஜூன் 15 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)

யாழ். மாநாகர சபை ஊழியர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இன்று காலை மீட்கப்பட்டுள்ளார் என யாழ். மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சண்டிலிப்பாய், இருப்புலம் வைரவர் ஆலய பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளில் தந்தையான சின்னராசா தபேந்திரன் (வயது 46) எனபவரே சடலமாக மீட்கப்பட்டதாக மானிப்பாய் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இவரது சடலம் சடலப் பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவரது மரணம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X