2025 மே 19, திங்கட்கிழமை

தெல்லிப்பழை மகாஜனா கல்லூரிக்கு இராணுவத்தினரால் உபகரணங்கள் கையளிப்பு

Super User   / 2012 ஜூன் 26 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத், ஜெ.டானியல்)

யாழ். தெல்லிப்பழை மகாஜனா கல்லூரிக்கு இராணுவத்தினரால் பாடசாலை உபகரணங்கள் நேற்று திங்கட்கிழமை கையளிக்கப்பட்டுள்ளன.

தேசமான்ய கே.பாலேந்திராவின் நிதி உதவியுடன் இராணுவத்தினரால் இத்தளபாடங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.பாடசாலை மாணவர்களுக்கான 300 கதிரைகள், 300 மேசைகள், ஆசிரியர்களுக்கான 25 கதிரைகள், 25 மேசைகள் என 1.35 மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்கள் வழங்கப்பட்டன.

தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி அதிபர் வேல்.சிவானந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மஹிந்த ஹத்துருசிங்க, வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X