2025 மே 19, திங்கட்கிழமை

யாழில் மீன்பிடிப் படகுகளை பதிவு செய்ய நடவடிக்கை

Suganthini Ratnam   / 2012 ஜூலை 06 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                    (ஜெ.டானியல்)

யாழ். மாவட்டத்திலுள்ள அனைத்து கடற்றொழில் படகுகளையும் பதியுமாறு கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சு அறிவித்துள்ளதாக யாழ். பிராந்திய நீரியல்வளத்துறைப் பணிப்பாளர் எஸ்.கணேசமூர்த்தி இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

கடந்த 30 வருடங்களாக வடபகுதி மீனவர்களின் படகுகள் பதிவின்றி மீன்பிடியில் ஈடுபட்டுள்ளன. தற்போதைய சூழ்நிலையில்; பதிவுசெய்யப்பட்ட படகுகளை மாத்திரம் கடற்றொழிலில் ஈடுபட அனுமதிக்குமாறு கடற்றொழில் அமைச்சு அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, முல்லைத்தீவுப் பிரதேசத்தில் 1983ஆம் ஆண்டுக்கு முன்னர் அப்பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட்ட சிங்கள கடற்றொழிலாளர்கள் மட்டும் அப்பகுதியில் தொழில் செய்ய அனுமதிக்கப்பட வேண்டுமென முல்லைத்தீவில் நேற்று வியாழக்கிழமை கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்ததாகவும் அவர் கூறினார். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X