2025 மே 19, திங்கட்கிழமை

வாகன விபத்தில் காயமடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி மரணம்

Kogilavani   / 2012 ஜூலை 13 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                         (ஜெ.டானியல்)
யாழ்.சாவகச்சேரி பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி இன்று வெள்ளிக்கிழழை உயிரிழந்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

கச்சாய் வீதி, சாவகச்சேரியைச் சேந்த அ.யூட்ரவீந்திரன் (வயது 13) என்ற  சிறுவனே இவ்வாறு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இச்சிறுவன் டிப்போக் கல்லூரியில் தரம் 8 இல் கல்வி கற்று வந்தமை குறிப்பிடத்தக்கது. 

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மேற்படி சிறுவன் தனது உறவினருடன் சைக்கிளில் சென்று கொண்டு இருந்த வேளை ஏ9 வீதி வழியால் வந்த வாகனம் ஒன்று இருவரையும் மோதி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X